‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான படம் 'அமரன்'. சிறப்பான விமர்சனங்கள், ரசிகர்களின் வரவேற்பு என இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்களும் வந்தன. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய இப்படத்திற்கான விழா இன்று(பிப்., 14) மாலை 4 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. விழாவில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் 'அமரன்' படக்குழுவினர் சில சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
தனியார் டிவிக்கு இந்த நிகழ்வின் உரிமையை விற்றுவிட்டதால் பத்திரிகையாளர்களுக்கு எந்தவிதமான அழைப்பும் அனுப்பப்படவில்லை. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த பத்திரிகையாளர்களை 'அமரன்' குழு புறக்கணித்தது பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.