கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? | வா வாத்தியாருக்கு யு/ஏ சான்றிதழ்: ஆனாலும் பதைபதைப்பில் படக்குழு |

அனில் ரவிப்புடி இயக்கத்தில், வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான தெலுங்குப் படம் 'சங்கராந்திகி வஸ்துனம்'. இப்படம் தற்போது 303 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய் நடித்த 'வாரிசு' படத் தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்தது. இதே நிறுவனம் தயாரித்து, சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கில் வெளியான பான் இந்தியா படமான 'கேம் சேஞ்ஜர்' படம் தோல்வியைத் தழுவியது. மற்றொரு படமான பாலகிருஷ்ணா நடித்த 'டாகு மகாராஜ்' படம் குறைந்த லாபத்தையே தந்தது.
'சங்கராந்திகி வஸ்துனம்' படம் பெரும் லாபத்தைக் கொடுத்ததாக சமீபத்தில் நடந்த நன்றி விழாவில் அதன் வினியோகஸ்தர்களே மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்கள். இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகாமல், தெலுங்கில் மட்டுமே வெளியானது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.