சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
தெலுங்கில் ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் கேம் சேஞ்ஜர் என்கிற பெரிய படம் வெளியாகி உள்ள நிலையில் ஜன-12ல் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகராஜ், ஜனவரி 14ல் வெங்கடேஷ் நடிப்பில் சங்கராந்தி வஸ்துனம், ஆக்கிய படங்களும் ரிலீஸ் ஆகின்றன. இதில் இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கி உள்ள சங்கராந்தி வஸ்துனம் படத்தில் கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சமீபத்தில் கோட் படம் மூலம் பிரபலமான மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாவதை தொடர்ந்து படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடத்தும் டாக்ஷோ போலவே நடிகர் ராணா டகுபதியும் ஒரு டாக் ஷோ நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சங்கராந்தி வஸ்துனம் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் பேசும் போது நடிகர் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷுடனான ஒரு காட்சி பற்றி பேசும்போது அவர் தனது கன்னத்தில் மாறி மாறி அறைய வேண்டும் என்றும், ஆனால் கொஞ்சம் வேகமாகவே அறைந்து விட்டார் என்றும் கூறினார்.
அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், “மெதுவாகத்தான் அடித்தேன் உங்களுக்கு வலிக்கவில்லையா என்று கேட்டபோது இன்னும் கொஞ்சம் வேகமாக அடி என்றார். அதன் பிறகு தான் ஓங்கி அறைந்தேன்” என்று கூறியவர் இதுவரை நீங்கள் யாரிடமாவது கன்னத்தில் அரை வாங்கி இருக்கிறீர்களா என்று கேட்க, அதற்கு வெங்கடேஷ் இதுதான் முதல் முறை என்று கூறினார்.