சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தின் மிகப்பெரிய வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கிறார். இன்னொரு பக்கம் தொடர்ந்து படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது படத்தின் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வரும் ராஷ்மிகா ரெகுலராக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது ஜிம்மில் எதிர்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்ட ராஷ்மிகவை மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து தற்போது ராஷ்மிகா தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதனால் அவர் நடித்து வந்த படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் மீண்டும் எப்போது படப்பிடிப்புக்கு திரும்பவேன் என ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.