'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி | துல்கர் சல்மானுக்கு பறந்த திடீர் நோட்டீஸ்! |

100 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட மலையாள நடிகர் பிரித்விராஜ் கடந்த 2019ல் முதல்முறையாக டைரக்ஷனில் இறங்கி மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற திரைப்படத்தை இயக்கினார். அரசியல் பின்னணியுடன் உருவாகி இருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று மலையாளத்தில் முதல் 200 கோடி வசூலித்த படம் என்கிற பெருமையை பெற்றது. அதன் பிறகு பிரித்விராஜ் ஒரு பக்கம் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் நடித்துக் கொண்டு இன்னொரு பக்கம் டைரக்ஷனிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தபடி மோகன்லாலை வைத்து தற்போது எம்புரான் படத்தை இயக்கி முடித்து விட்டார். வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. இந்த நிலையில் சலார் படத்தில் பிரித்விராஜூடன் இணைந்து நடித்த நடிகர் பிரபாஸ் எம்புரான் டீசருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எம்புரான் டீசரை பார்த்தேன். உண்மையிலேயே உலகத்தரத்தில் இருக்கிறது. பிரமிப்பாக படமாக்கப்பட்டுள்ளது. ஒன் அண்ட் ஒன்லி மோகன்லால் சார் நடிப்பில், என்னுடைய சொந்த வரதாவின் இயக்கத்தில்.. (பிரித்விராஜ் சலார் படத்தில் வரதராஜ மன்னர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்). மொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.