ஹிந்தித் திரையுலகின் மூத்த பாடகர் உதித் நாராயண். ஹிந்தி தவிர தமிழில் கூட பாடல்களைப் பாடியிருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு நடந்த இசை நிகழ்ச்சியில், பெண் ரசிகை ஒருவருக்கு உதட்டின் மீது முத்தம் கொடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். மேடையில் உதித்துடன் செல்பி எடுக்க வந்த அந்த ரசிகையின் தலையை சாய்த்து கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.
அதற்கடுத்து வேறொரு பெண் ஒருவரும் அது போல செல்பி எடுக்க வந்த போது அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்த பின் உதட்டிலும் முத்தம் கொடுத்துள்ளார் உதித் நாராயண். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. ரசிகர்கள் பலரும் உதித் நாராயண் செயலை கண்டித்துள்ளனர்.
இதற்கு முன்பு பாடகிகள் ஷ்ரேயா கோஷல், அல்கா யாக்னின் ஆகியோருக்கு உதித் முத்தம் கொடுத்த புகைப்படங்களையும் சில ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர்.
தற்போது முத்த சர்ச்சை குறித்து உதித் நாராயண் மன்னிப்பு கேட்பாரா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.