ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' |

1943ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் கன்னடத்தில் தயாரித்த படம் 'சத்ய ஹரிச்சந்திரா'. ஆர்.நாகேந்திர ராவ் இயக்கி நடித்தார். சுப்பையா நாயுடு, லட்சுமிபாய் உள்ளிட்ட பலர் நடித்தனர். அனைவரும் கன்னட நடிகர்கள். ஆர்.சுதர்சனம் இசை அமைத்திருந்தார், கிருஷ்ண அய்யர் ஒளிப்பதிவு செய்தார். படம் தயாரானதும் அதை போட்டு பார்த்த மெய்யப்ப செட்டியார் இதே படத்தை தமிழில் தயாரிக்க விரும்பினார்.
அப்போது ஏவிஎம் நிறுவனத்தில் சீனியர் ஆடியோகிராபராக இருந்தவர் ஏ.எல்.ராகவன் “தனியாக தயாரிக்க வேண்டாம். இப்போது 'டப்பிங்' என்ற புதிய தொழில்நுட்பம் வந்திருக்கிறது. படத்தில் இடம்பெறும் பின்னணி இசையை மாற்றாமல் பேசும் வசனத்தை மட்டும் மாற்ற முடியும்” என்றார். ஆனால் இதனை மெய்யப்ப செட்டியார் நம்பவில்லை. இது சாத்தியமே இல்லை. கன்னட உச்சரிப்பு வேறு, தமிழ் உச்சரிப்பு வேறு என்றார்.
ஒரு ரீலை மட்டும் மாற்றிக் காட்டுகிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால் பின்பு முழு படத்தையும் மாற்றலாம் என்று ஒரு ரீலை டப் செய்தார். கன்னட வாயசைப்புக்கு ஏற்ற வார்த்தைகளை போட்டு வசனத்தில் மாற்றம் செய்தார். அது சரியாக அமைந்தது. ஆச்சர்யப்பட்ட மெய்யப்ப செட்டியார் முழுபடத்தையும் டப் செய்ய சொன்னார்.
பின்னர் தனது தொழிலாளர்கள், பொதுக்களுக்கு போட்டு காட்டி ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என்று கேட்டார். அவர்கள் அசல் தமிழ் படம் போலவே இருப்பதாக சொன்னார்கள். பின்னர் படத்தை தியேட்டரில் வெளியிட்டார். படமும் வெற்றி பெற்றது. கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த இந்த படமே தமிழில் முதல் டப்பிங் படம்.