விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் |

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்தாண்டு ஜன., 25ல் இலங்கையில் மறைந்தார். அவரது உடல் தேனியில் உள்ள இளையராஜாவிற்கு சொந்தமான பண்ணை நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பவதாரிணி மறைந்து ஓராண்டு ஆன நிலையில் இளையராஜா உருக்கமான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது : ‛‛என் அருமை மகள் பவதா (பவதாரிணி) எங்களைவிட்டு பிரிந்த நாள். அன்பே உருவான மகள் பிரிந்த பின்பு தான் அந்தக் குழந்தை எவ்வளவு அன்பு மையமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது. காரணம் என் கவனம் எல்லாம் இசையிலேயே இருந்ததால் என் குழந்தைகளை கவனிக்காமல் விட்டது இப்போது வேதனையை தருகிறது.
அந்த வேதனை தான் மக்களை ஆறுதல்படுத்தும் இசையாக எனக்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறது. பிப்., 12ல் பவதாவின் பிறந்தநாள். அன்றைய தினம் தான் அவருக்கு திதி வருவதால் அதை நினைவு நாள் நிகழ்ச்சியாக நடத்தலாம் என்று எண்ணி உள்ளேன். அதில் எல்லா இசைக்கலைஞர்களும் பங்கெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மகள் பவதா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.