'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்தாண்டு ஜன., 25ல் இலங்கையில் மறைந்தார். அவரது உடல் தேனியில் உள்ள இளையராஜாவிற்கு சொந்தமான பண்ணை நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பவதாரிணி மறைந்து ஓராண்டு ஆன நிலையில் இளையராஜா உருக்கமான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது : ‛‛என் அருமை மகள் பவதா (பவதாரிணி) எங்களைவிட்டு பிரிந்த நாள். அன்பே உருவான மகள் பிரிந்த பின்பு தான் அந்தக் குழந்தை எவ்வளவு அன்பு மையமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது. காரணம் என் கவனம் எல்லாம் இசையிலேயே இருந்ததால் என் குழந்தைகளை கவனிக்காமல் விட்டது இப்போது வேதனையை தருகிறது.
அந்த வேதனை தான் மக்களை ஆறுதல்படுத்தும் இசையாக எனக்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறது. பிப்., 12ல் பவதாவின் பிறந்தநாள். அன்றைய தினம் தான் அவருக்கு திதி வருவதால் அதை நினைவு நாள் நிகழ்ச்சியாக நடத்தலாம் என்று எண்ணி உள்ளேன். அதில் எல்லா இசைக்கலைஞர்களும் பங்கெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மகள் பவதா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.