ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி மற்றும் பிரபாஸின் சலார் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதிஹாசனிடத்தில் கடந்த மாதத்தில் திருமணம் குறித்து மீடியாக்கள் கேள்வி கேட்டபோது, காதலிப்பது எனக்கு பிடிக்கும். அவருடன் பயணிப்பதும் பிடிக்கும். என்றாலும் காதலிக்கும் நபர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நான் யோசித்ததில்லை என்று கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் மீண்டும் நிருபர்கள் அவரிடத்தில் திருமணம் குறித்து கேள்வி கேட்டதால் கடும் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார் ஸ்ருதிஹாசன். அவர்களை நோக்கி, எதற்காக என் திருமணத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்? என்னுடைய திருமணத்திற்கு நீங்கள் கரண்டு பில் கட்ட போகிறீர்களா? இல்லை சாப்பாடு போட போகிறீர்களா? அப்படி இல்லைன்னா இன்விடேஷன் ஆவது அடிச்சு கொடுக்கப் போறீங்களா? என்று கோபமாக கேள்வி கேட்ட ஸ்ருதிஹாசன், இனிமேல் திருமணம் குறித்து என்னிடத்தில் யாரும் கேள்வி கேக்காதீர்கள் என்று எச்சரிக்கும் தொனியில் பதில் கொடுத்திருக்கிறார்.