மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் |

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி மற்றும் பிரபாஸின் சலார் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதிஹாசனிடத்தில் கடந்த மாதத்தில் திருமணம் குறித்து மீடியாக்கள் கேள்வி கேட்டபோது, காதலிப்பது எனக்கு பிடிக்கும். அவருடன் பயணிப்பதும் பிடிக்கும். என்றாலும் காதலிக்கும் நபர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நான் யோசித்ததில்லை என்று கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் மீண்டும் நிருபர்கள் அவரிடத்தில் திருமணம் குறித்து கேள்வி கேட்டதால் கடும் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார் ஸ்ருதிஹாசன். அவர்களை நோக்கி, எதற்காக என் திருமணத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்? என்னுடைய திருமணத்திற்கு நீங்கள் கரண்டு பில் கட்ட போகிறீர்களா? இல்லை சாப்பாடு போட போகிறீர்களா? அப்படி இல்லைன்னா இன்விடேஷன் ஆவது அடிச்சு கொடுக்கப் போறீங்களா? என்று கோபமாக கேள்வி கேட்ட ஸ்ருதிஹாசன், இனிமேல் திருமணம் குறித்து என்னிடத்தில் யாரும் கேள்வி கேக்காதீர்கள் என்று எச்சரிக்கும் தொனியில் பதில் கொடுத்திருக்கிறார்.