இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

விஜய் நடித்த 'வாரிசு', ஷங்கர் இயக்கிய 'கேம் சேஞ்ஜர்' படங்களைத் தயாரித்த பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு வீடு, அலுவலகங்களில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரி சோதனை நடைபெற்றது. அவர் மட்டுமல்லாது மேலும் சில தெலுங்கு தயாரிப்பாளர்களிடமும் சோதனை நடைபெற்ற தெலுங்குத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வருமான வரி சோதனை பற்றி தில் ராஜு பேசியுள்ளார். “2008க்குப் பிறகு 16 வருடங்கள் கழித்து இப்போதுதான் எங்களது இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதனிடையே எனது கணக்கு ஆவணங்களை மூன்று முறை சோதனையிட்டுள்ளனர். வியாபாரம் செய்பவர்களிடம் வருமான வரி சோதனை நடைபெறுவது வழக்கமான ஒன்று. நடைபெற்ற வருமான வரி சோதனையில் ஆவணங்கள், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக வந்த தகவல்கள் தவறானவை. அப்படி எதுவும் நடக்கவில்லை. தவறான ஆவணங்கள், பணம் ஆகியவை என என்னிடம் எதுவும் கிடையாது.
என்னிடம் மற்றும் எனது குடும்பத்தினரிடம் என மொத்தமாக 20 லட்ச ரூபாய் பணம் வைத்திருந்தோம். அதற்கான உரிய ஆவணங்களையும் சமர்ப்பித்தோம். கடந்த ஐந்து வருடங்களில் நான் எந்த சொத்தையும் வாங்கவில்லை. எனது திரைப்படத் தயாரிப்பில் உள்ள அனைத்து விவரங்களையும் விவரமாக எடுத்து சொன்னேன். எங்களது ஆவணங்கள் அனைத்தும் சரியானவையாகவும், தெளிவாகவும் இருந்ததாக சொன்னார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.




