பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

விஜய் நடித்த 'வாரிசு', ஷங்கர் இயக்கிய 'கேம் சேஞ்ஜர்' படங்களைத் தயாரித்த பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு வீடு, அலுவலகங்களில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரி சோதனை நடைபெற்றது. அவர் மட்டுமல்லாது மேலும் சில தெலுங்கு தயாரிப்பாளர்களிடமும் சோதனை நடைபெற்ற தெலுங்குத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வருமான வரி சோதனை பற்றி தில் ராஜு பேசியுள்ளார். “2008க்குப் பிறகு 16 வருடங்கள் கழித்து இப்போதுதான் எங்களது இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதனிடையே எனது கணக்கு ஆவணங்களை மூன்று முறை சோதனையிட்டுள்ளனர். வியாபாரம் செய்பவர்களிடம் வருமான வரி சோதனை நடைபெறுவது வழக்கமான ஒன்று. நடைபெற்ற வருமான வரி சோதனையில் ஆவணங்கள், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக வந்த தகவல்கள் தவறானவை. அப்படி எதுவும் நடக்கவில்லை. தவறான ஆவணங்கள், பணம் ஆகியவை என என்னிடம் எதுவும் கிடையாது.
என்னிடம் மற்றும் எனது குடும்பத்தினரிடம் என மொத்தமாக 20 லட்ச ரூபாய் பணம் வைத்திருந்தோம். அதற்கான உரிய ஆவணங்களையும் சமர்ப்பித்தோம். கடந்த ஐந்து வருடங்களில் நான் எந்த சொத்தையும் வாங்கவில்லை. எனது திரைப்படத் தயாரிப்பில் உள்ள அனைத்து விவரங்களையும் விவரமாக எடுத்து சொன்னேன். எங்களது ஆவணங்கள் அனைத்தும் சரியானவையாகவும், தெளிவாகவும் இருந்ததாக சொன்னார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.