தமிழ் பாடல்களில் ஆங்கில ஆதிக்கம் : அனுராக் கேள்விக்கு மணிரத்னம் பதில் | கடவுளுக்கு தெரியும் : குழந்தை விஷயம் குறித்து கேட்ட ரசிகருக்கு சாந்தனு பாக்யராஜ் பதிலடி | கேளிக்கை வரி குறைப்பு: திரைத்துறையினர் மகிழ்ச்சி | தள்ளிப்போனது இளையராஜா பாராட்டு விழா | கமல் உடன் முத்தக்காட்சி பற்றி அபிராமி விளக்கம் | சிவனே உத்தரவிட்டு கண்ணப்பா படத்தை எடுத்ததாக உணர்கிறோம் : விஷ்ணு மஞ்சு | 10 வருட சிறந்த படங்களை அறிவித்த தெலுங்கானா அரசு | ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி | 21 படம் நடித்தும் என்ன பலன்: விஷ்ணு விஷால் பீலிங் | கிஷன் தாஸின் புதிய படம் ஆரோமலே |
தமிழ் சினிமாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆறு நேரடி தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. தெலுங்கு சினிமாவில் மகர சங்கராந்தியை முன்னிட்டு மூன்றே மூன்று படங்கள் மட்டுமே வெளிவந்தன. ஜனவரி 10ல் 'கேம் சேஞ்ஜர்', 12ல் 'டாகு மகாராஜ்', 14ல் 'சங்கராந்திகி வஸ்துனம்' ஆகிய படங்கள் வந்தன.
அவற்றில் முதலில் வந்த 'கேம் சேஞ்ஜர்' படம் முதல் நாளிலேயே 186 கோடி வசூலைப் பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், ஒரு வாரத்தில்தான் அப்படம் அந்த வசூலைப் பெற்றதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 200 கோடி வசூலைக் கடந்துள்ள இப்படம் இன்னும் 125 கோடி வசூலைக் கடந்தால்தான் வியாபார ரீதியாக வெற்றி பெற முடியும் என்கிறார்கள்.
அதேசமயம் 'டாகு மகாராஜ்' படம் 100 கோடி வசூலை கடந்துள்ளது. இன்னும் சில கோடி வசூலித்தால் வெற்றிப் பட வரிசையில் இணைந்துவிடுமாம். 'சங்கராந்திகி வஸ்துனம்' படம் 100 கோடி வசூலைக் கடந்து போட்ட முதலீட்டையும் எடுத்துவிட்டு, தற்போது லாபக் கணக்கில் நுழைந்துவிட்டதாம். இரண்டு சீனியர் ஹீரோக்களின் படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது தெலுங்குத் திரையுலகத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.