பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

தமிழ் சினிமாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆறு நேரடி தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. தெலுங்கு சினிமாவில் மகர சங்கராந்தியை முன்னிட்டு மூன்றே மூன்று படங்கள் மட்டுமே வெளிவந்தன. ஜனவரி 10ல் 'கேம் சேஞ்ஜர்', 12ல் 'டாகு மகாராஜ்', 14ல் 'சங்கராந்திகி வஸ்துனம்' ஆகிய படங்கள் வந்தன.
அவற்றில் முதலில் வந்த 'கேம் சேஞ்ஜர்' படம் முதல் நாளிலேயே 186 கோடி வசூலைப் பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், ஒரு வாரத்தில்தான் அப்படம் அந்த வசூலைப் பெற்றதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 200 கோடி வசூலைக் கடந்துள்ள இப்படம் இன்னும் 125 கோடி வசூலைக் கடந்தால்தான் வியாபார ரீதியாக வெற்றி பெற முடியும் என்கிறார்கள்.
அதேசமயம் 'டாகு மகாராஜ்' படம் 100 கோடி வசூலை கடந்துள்ளது. இன்னும் சில கோடி வசூலித்தால் வெற்றிப் பட வரிசையில் இணைந்துவிடுமாம். 'சங்கராந்திகி வஸ்துனம்' படம் 100 கோடி வசூலைக் கடந்து போட்ட முதலீட்டையும் எடுத்துவிட்டு, தற்போது லாபக் கணக்கில் நுழைந்துவிட்டதாம். இரண்டு சீனியர் ஹீரோக்களின் படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது தெலுங்குத் திரையுலகத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.