நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
மலையாள திரையுலகில் பிரேமம் படம் மூலமாக நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் சவ்பின் சாஹிர். தொடர்ந்து துல்கர் சல்மான், பஹத் பாசில் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக துல்கர் சல்மானின் படங்களில் அதிகம் இவர் நடித்துள்ளார். அது மட்டுமல்ல அடிப்படையில் இவர் உதவி இயக்குனராக இருந்தவர்.
பின்னர் துல்கர் சல்மானை வைத்து கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு பறவ என்கிற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சவ்பின் சாஹிர். அதன் பிறகு ஒரு குணச்சித்திர நடிகராக, கதையின் நாயகனாக பிஸியான இவர் கடந்த வருத்தம் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் நண்பர்கள் கூட்டத்தில் நண்பரை காப்பாற்றும் பிரதான நபராக நடித்து மொழி தாண்டி ரசிகர்களை வசீகரித்தார்.
அதன் பலனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. தற்போது கூலி படத்தில் நடித்து வரும் இவர் இதனைத் தொடர்ந்து, தான் மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்ப இருப்பதாகவும் கூலி படப்பிடிப்பு முடிவடைந்ததும் அதற்கான வேலைகளை ஆரம்பிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். தனது இரண்டாவது படத்திலும் துல்கர் சல்மான் தான் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதையும் இவர் உறுதி செய்துள்ளார்.