எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் |

பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில் இந்த பொங்லுக்கு வெளியாகி உள்ள படம் ‛வணங்கான்'. இப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார். இந்த படத்திற்கு கிடைத்த பாராட்டு, வரவேற்புக்காக பாலாவுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அருண் விஜய்.
அவர் வெளியிட்ட பதிவில், ‛‛என் இயக்குனர் பாலாவிற்கு நன்றி. வணங்கான் படத்தில் கோட்டியாக வாழ அனுமதித்ததற்காக நன்றி. இதுமாதிரி வேடம் என் வாழ்வில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக் கூடியது. நான் என்ன செய்வேன் என எனக்கு உணர்த்தினீர்கள். இதற்காக எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன், என் மனமார்ந்த நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.