இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' | அதை மஞ்சுவாரியரிடமே போய் கேளுங்கள் ; நடிகை பார்வதி காட்டம் |
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஜன., 10ல் வெளியீட்டிற்கு தயாராகி வரும் படம் 'வணங்கான்'. இந்த படத்தில் முதலில் சூர்யா தயாரித்து, நடித்து வந்து பின்பு இப்படத்தில் இருந்து வெளியேறியது அனைவரும் அறிந்தது.
தற்போது நேர்காணலில் இது குறித்து பாலா பேசியதாவது "வணங்கான் படத்திலிருந்து சூர்யாவாக விலகவில்லை. கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தளங்களில் சூர்யாவை வைத்து நேரடியாக படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. அங்கு அவரை காண ரசிகர்கள் கூடினார்கள். இதனால் திட்டமிட்டவாறு பல நேரங்களில் எங்களால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. அதன் பின்னர் நானும், சூர்யாவும் ஆலோசித்து தான் அந்த முடிவை எடுத்தோம். எங்களுக்குள் இன்னும் நல்ல உறவு தான் உள்ளது" என தெரிவித்துள்ளார்.