கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் |

துபாயில் நடைபெற்ற '24H' கார் ரேஸில் ஒரு பிரிவில் நடிகர் அஜித்தின் “அஜித்குமார் ரேஸிங்” அணி மூன்றாவது இடத்தை பெற்றது. இதையடுத்து அஜித்துக்கும் அவரது அணிக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது போர்ச்சுக்கலில் நடக்கவுள்ள மற்றொரு ரேஸ் போட்டியில் அஜித் தனது அணியினருடன் பங்கேற்க சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே துபாய் கார் ரேஸ் நிறைவுக்கு பிறகு யூடியூப் சேனல் ஒன்றிற்கு அஜித் அளித்த பேட்டி, தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறுகையில், ''சென்னையில் இரவு நேர கார் பந்தயத்தை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி நடத்தியது வரவேற்கத்தக்கது. நமது நாட்டில் கார் பந்தயங்களுக்கு அது மிகவும் உந்துசக்தியாக அமைந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எனக்கு அளித்த ஆதரவுக்கும் நன்றி'' எனக் கூறினார்.