ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி இருவருக்கும் இணையாக வளர்ந்து வந்தவர் தான் நடிகர் சுரேஷ்கோபி. குறிப்பாக ஆக்ஷன் படங்களாக நடித்து ஆக்ஷன் ரசிகர்களின் மிகப்பெரிய வட்டத்தை பெற்றிருந்தார். சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இறங்கி தேசிய கட்சியான பாஜகவில் சேர்ந்தார். சில ஆண்டுகள் ராஜ்யசபா எம்பியாக பொறுப்பு வகித்தார்.
2024ல் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் எம்பி ஆக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத்தொடர்ந்து அவருக்கு பெட்ரோலியம் எரிவாயு துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே துறை சார்ந்த பணிகளை கவனித்து வந்த அவர் தான் ஏற்கனவே நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்துக் கொடுப்பதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார்.
சமீபத்தில் தான் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது. அந்த வகையில் கடந்த 2020லேயே அவர் நடிப்பதாக துவங்கப்பட்டு கொரோனா தாக்கம், கதை பிரச்னை, சுரேஷ் கோபியின் அரசியல் பயணம் என பல காரணங்களால் நின்று போயிருந்த ஒத்தக்கொம்பன் திரைப்படம் தற்போது படப்பிடிப்பை துவங்கியுள்ளது. மத்திய அமைச்சரான பிறகு நீண்ட நாட்கள் கழித்து சுரேஷ்கோபி. இந்த படத்தில் நடிப்பதற்காக முதன்முறையாக நேற்று முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தை மேத்யூ தாமஸ் என்பவர் இயக்குகிறார்.