ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பெப்சியில் நடந்த அடிதடி மோதலை தொடர்ந்து பெப்சி சார்பில் நடத்தப்பட்ட ஸ்டிரைக்கால் கார்த்தி, விஷால் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. டிரைவர்ஸ் யூனியனின் உள் விவகாரங்களில் பெப்சி தலையிடுவதாகவும், அவர்கள் நடத்த இருந்த டிரைவர்ஸ் யூனியன் தேர்தலில் பெப்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் மூக்கை நுழைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. இந்நிலையில் நேற்று பெப்சியுடன் பேச்சுவார்த்தைக்கு வந்த டிரைவர்ஸ் யூனியன் செயலாளர் செந்தில், பெப்சியின் பொருளாளர் சண்முகத்துடனும், பெப்சியின் துணை செயலாளர் தனபால் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அது இறுதியில் கைகலப்பில் முடிந்திருக்கிறது. இதுகுறித்து சண்முகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ‘பெப்சி’ தொழிலாளர்கள் இன்று(மே 28ம் தேதி) ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். கோடம்பாக்கம் டைரக்டர்கள் காலனியில் திரண்டு, நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் போட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெப்சி அமைப்பினரின் போராட்டாத்தால், கார்த்தி நடித்து வரும் ‘பிரியாணி’, விஷால் நடித்து வரும் ‘பட்டத்துயானை’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன.