25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
நடிகர் துல்கர் சல்மான் நடிக்க துவங்கிய புதிதில் அவர் நடித்த முதல் படமே ஆக்சன் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவதாக அவர் நடித்த 'உஸ்தாத் ஹோட்டல்' திரைப்படம் அவரை பெண்களிடமும் குழந்தைகளிடமும் கொண்டு போய் சேர்க்கும் விதமாக குடும்பப் பாங்கான கதை அம்சமாக அமைந்ததுடன் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. அன்வர் ரஷீத் இயக்கிய இந்த படத்திற்கு 'பெங்களூர் டேஸ்' புகழ் இயக்குநர் அஞ்சலி மேனன் கதை எழுதியிருந்தார். தாத்தாவுக்கும் பேரனுக்குமான பாசத்தையும் ஒரு இளைஞனுக்கு அவன் எதிர்காலத்தை தீர்மானித்து கொள்ளும் உரிமை இருக்கிறது என்பதையும் மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது. 2012ல் இந்தப்படம் வெளியானது.
இந்த நிலையில் தற்போது 12 வருடங்கள் கடந்த நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 3ம் தேதி கேரளாவில் பல திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்துள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான அன்வர் ரஷீத். இது இப்போது இருக்கும் துல்கர் ரசிகர்கள் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய படம் என்பது ஒரு காரணம் என்றால், சமீபத்தில் வெளியான அவரது 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் நன்றாக ஓடி இருப்பதால் இப்போது இந்த 'உஸ்தாத் ஹோட்டல்' படத்தை வெளியிட்டால் நல்ல வசூல் பார்க்கலாம் என்பதும் இன்னொரு காரணம் என விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.