கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' |
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை திவ்யபாசுரம் ஆன்மிக கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் திருத்தண்டி நாராயண ராமானுஜர் ஜீயர் சுவாமிகள், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்றனர்.
இதனை முன்னிட்டு நேற்று மாலை 6:00 கோயிலுக்கு வந்த இவர்கள் மணவாள மாமுனிகள் சன்னதி, ஆண்டாள், பெரிய பெருமாள், பெரியாழ்வார், ராமானுஜர் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின் இரவு 8:35 மணிக்கு திருப்பாவை திவ்யபாசுரம் நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து திருத்தண்டி நாராயண ராமானுஜர் ஜீயர் சுவாமிகள், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், இளையராஜா பேசினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் தென் பாரத அமைப்பாளர் சரவண கார்த்திக், அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீனிவாச வெங்கடேஷ அய்யங்கார் குழுவினர் செய்திருந்தனர்.