அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் மல்டிஸ்டார் படங்களைப் பார்ப்பது மிகவும் அபூர்வம். முன்னணியில் இருக்கும் நடிகர்கள் யாரும் ஒருவருடன் மற்றொருவர் இணைந்து நடிக்கவே மாட்டார்கள். ஏன், இரண்டாம் நிலை நடிகர்கள் கூட அப்படியான படங்கள் வந்தால் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள். தோற்றாலும் பரவாயில்லை தனி நாயகனாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிப்பார்கள்.
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2018ல் 'செக்கச் சிவந்த வானம்' படம் ஒரு மல்டிஸ்டார் படமாக வெளிவந்தது. விஜய் சேதுபதி, சிலம்பரசன், அருண் விஜய் ஆகியோருடன் அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஒரு முழுமையான மல்டிஸ்டார் படமாக வந்தது.
அதற்கடுத்து ஆறு வருடங்களுக்குப் பிறகு தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் மல்டிஸ்டார் படம் ஒன்று உருவாக உள்ளது. சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாக உள்ள இப்படத்தில் அவருடன் இணைந்து ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் நடிக்கிறார்கள். சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த 'புறநானூறு' படம்தான் இது. அதே தலைப்பு இப்படத்திற்கு அறிவிக்கப்படுமா அல்லது வேறு தலைப்பா என்பது இனிமேல்தான் தெரியும்.
இப்படத்திற்காக அனைத்து நடிகர்களும் 60 கால கட்டத் தோற்றத்திற்கு தங்களை மாற்றிக் கொள்ள உள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்.