சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

தமிழ்நாட்டை சேர்ந்த சமந்தா தெலுங்கில் முன்னணி நடிகை ஆனார். அங்குள்ள மிகப்பெரிய சினிமா குடும்பமான அக்னினேனி நாகேஸ்வரராவ் குடும்பத்து மருமகள் ஆனார். நாகேஸ்வரராவின் பேரனும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். விவாகரத்தும் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் நாக சைதன்யா சமீபத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலாவை 2வது திருமணம் செய்து கொண்டார். இதனால் அடுத்து சமந்தாவின் திருமணம் எப்போது என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதை மறைமுக உணர்த்தி ஜோதிட வடிவில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “2025-ல் ரிஷபம், கன்னி, மகர ராசியினர் இவற்றை பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த மூன்று ராசிகாரர்களும் அடுத்த வருடம் பிசியாக இருப்பார்கள், தொழில் ரீதியாக முன்னேறுவார்கள். நிறைய பணம் சம்பாதிப்பார்கள். இன்னும் நம்பிக்கையுடன் காதலை அளிக்கும் துணைவரை பெறுவார்கள். குழந்தைகளையும் பெற்றுக் கொள்வார்கள். லட்சியங்களை அடைவார்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்வார்கள். மேலும் பல வாய்ப்புகளை பெறுவார்கள். உடல் ரீதியாகவும் பலமாக இருப்பார்கள். இதில் இருப்பவையெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.
சமந்தா ரிஷப ராசிக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.