'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
தமிழ்நாட்டை சேர்ந்த சமந்தா தெலுங்கில் முன்னணி நடிகை ஆனார். அங்குள்ள மிகப்பெரிய சினிமா குடும்பமான அக்னினேனி நாகேஸ்வரராவ் குடும்பத்து மருமகள் ஆனார். நாகேஸ்வரராவின் பேரனும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். விவாகரத்தும் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் நாக சைதன்யா சமீபத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலாவை 2வது திருமணம் செய்து கொண்டார். இதனால் அடுத்து சமந்தாவின் திருமணம் எப்போது என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதை மறைமுக உணர்த்தி ஜோதிட வடிவில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “2025-ல் ரிஷபம், கன்னி, மகர ராசியினர் இவற்றை பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த மூன்று ராசிகாரர்களும் அடுத்த வருடம் பிசியாக இருப்பார்கள், தொழில் ரீதியாக முன்னேறுவார்கள். நிறைய பணம் சம்பாதிப்பார்கள். இன்னும் நம்பிக்கையுடன் காதலை அளிக்கும் துணைவரை பெறுவார்கள். குழந்தைகளையும் பெற்றுக் கொள்வார்கள். லட்சியங்களை அடைவார்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்வார்கள். மேலும் பல வாய்ப்புகளை பெறுவார்கள். உடல் ரீதியாகவும் பலமாக இருப்பார்கள். இதில் இருப்பவையெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.
சமந்தா ரிஷப ராசிக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.