லோக்கல் கேபிள் சேனலில் கேம் சேஞ்ஜர் படத்தை ஒளிபரப்பிய நபர் கைது | கவுதம் மேனன் டைரக்ஷனில் நடிக்கும் விஷால் | 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துல்கர் சல்மானை இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | சுப துக்க நிகழ்வுகளில் மம்முட்டியின் நிழல் போல தொடரும் இளம் நடிகர் | சிங்கம் பின்னணி இசை ஒலிக்க படப்பிடிப்புக்கு வந்த மலையாள நடிகர் | சுரேஷ்கோபி படத்தில் வில்லனாக இணைந்த கபீர் துகான் சிங் | 2025 சங்கராந்தி - வெளியான மூன்று தெலுங்குப் படங்களும் 100 கோடி வசூல் | 'வலிமை', 'துணிவு' சாதனையைக் கூட நெருங்காத 'விடாமுயற்சி' | 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது |
ஒரு காலத்தில் சினிமாவில் முன்னணியில் இருக்கும் கதாநாயகியர் சரியான வயதில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். எங்கே தங்களது சினிமா வாழ்க்கை பாதிக்கப்படுமோ என திருமணத்தை தள்ளி வைப்பார்கள். திருமணம் செய்து கொண்டாலே கதாநாயகி என்ற அந்தஸ்து போய்விடும். அதற்குப் பின் அக்கா, அண்ணி வேடங்களல் மட்டுமே நடிக்க அழைப்பதும் அதற்குக் காரணமாக இருந்தது.
ஆனால், கடந்த சில வருடங்களில் முன்னணியில் இருந்த போதே திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் களம் இறங்கிய சில கதாநாயகியரைப் பார்த்துவிட்டோம். அந்தக் காலம் போல இந்தக் காலத்தில் திருமணம் என்பது அவர்களது சினிமா வாழ்க்கைக்குத் தடையாக இல்லாமல் போய்விட்டது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் சமந்தா. திருமணம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து தொடர்ந்து நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கணவரைப் பிரிந்தாலும் அவரது திரையுலக வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
'நேரம், ராஜாராணி' ஆகிய படங்களில் நடித்த மலையாள நடிகை நஸ்ரியா தமிழிலும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார். ஆனால், முன்னணியில் இருந்த போதே நடிகர் பஹத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டார். சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார்.
தமிழில் விஜய்யுடன் 'தலைவா', விக்ரமுடன் 'தெய்வத் திருமகள்' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அமலா பால் முன்னணி நடிகையாக இருந்த போதே இயக்குனர் விஜய்யைத் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் விவாகரத்து பெற்றாலும் அடுத்து வேறு திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுவிட்டார். தொடர்ந்து நடித்தும் வருகிறார்.
'காதல் கொண்டேன், கோவில், 7ஜி ரெயின்போ காலனி' என 2000ம் ஆண்டின் துவக்கத்தில் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட கதாநாயகியாக இருந்தவர் சோனியா அகர்வால். முன்னணியில் இருந்த போதே இயக்குனர் செல்வராகவனைக் கல்யாணம் செய்து கொண்டார். பின்னர் பிரிந்தாலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
'வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான்' என சில வருடங்களுக்கு முன்பு முன்னணிக்கு முன்னேறிக் கொண்டிருந்த நடிகையாக இருந்தார் சாயிஷா. ஆனால், நடிகர் ஆர்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே கவுதம் கிச்சுலுவை என்பவரை திருமணம் செய்தார் நடிகை காஜல் அகர்வால். குழந்தை பிறந்த பின் கொஞ்சகாலம் சினிமாவிற்கு பிரேக் விட்டவர் மீண்டும் நடித்து வருகிறார்.
இப்படி முன்னணியில் இருந்த போதே திருமணம் செய்து கொண்ட நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அவருடைய நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபலமானவர் அடுத்து ஹிந்தி அறிமுகப் படமான 'பேபி ஜான்' படத்திற்காகக் காத்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் கீர்த்தி நடிப்பைத் தொடர்வார் என்பதில் சந்தேகமில்லை.