பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

'அமரன்' படம் மூலம் 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற சிவகார்த்திகேயன் தற்போது சில ஹீரோக்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு டாப் 5 இடத்தைப் பிடித்துவிட்டதாக வினியோகஸ்தர்களே தெரிவிக்கிறார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் அவர் இருக்கிறார் என்கிறார்கள்.
'அமரன்' படம் தந்த வெற்றி, வசூலை அடுத்து தன்னுடைய அடுத்த படங்களுக்கான சம்பளத்தை அவர் அதிரடியாக உயர்த்திவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள 'புறநானூறு' படத்திற்காக 50 கோடி சம்பளம் என்றும், அடுத்து 'டான்' படத்தை இயக்கிய சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு 60 கோடி சம்பளம் என்றும் சொல்கிறார்கள்.
300 கோடி வரை அதிகபட்ச வியாபாரம் 100 கோடி மினிமம் கியாரண்டி வியாபாரம் என்று சிவகார்த்திகேயனுக்கு இருப்பதால் அவருடைய சம்பள உயர்வு சரியானதே என்பது கோலிவுட் தகவல்.