'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி | பிளாஷ்பேக்: சினிமாவில் சிவகுமாரின் 60வது ஆண்டு: தீராத அந்த இரண்டு ஏக்கங்கள் | ராணாவை நள்ளிரவில் எழுப்பிய கட்டப்பா ; 'ராணா நாயுடு' வெப் சீரிஸுக்கு வித்தியாசமான புரமோஷன் |
தமிழக அரசின் நிதியுதவியுடன் இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பின் சார்பில் 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இண்டோ சினி அப்ரிசேஷன் தலைவர் சிவன் கண்ணன், பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ.வி.எம்.சண்முகம், துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, திரைப்பட இயக்குனர்கள் கே பாக்யராஜ், பார்த்திபன், நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு மற்றும் திரைப்படத் துறை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: இந்தியாவின் முன்னணி திரைப்பட விழாவாக சென்னை சர்வதேச திரைப்பட விழா மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக அரசால் திரைப்படத்துறையினருக்கு ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திரைப்படத்துறையினரின் நலவாரியத்தில் 27 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இவ்வாரியம் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் வழங்க தேர்வுக்குழு அமைக்கப்பட்டு விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 500 கோடி மதிப்பீட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரி பணிகள் முடிவடையும். எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் 40 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள் தொடங்கவுள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.