சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

தமிழக அரசின் நிதியுதவியுடன் இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பின் சார்பில் 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இண்டோ சினி அப்ரிசேஷன் தலைவர் சிவன் கண்ணன், பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ.வி.எம்.சண்முகம், துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, திரைப்பட இயக்குனர்கள் கே பாக்யராஜ், பார்த்திபன், நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு மற்றும் திரைப்படத் துறை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: இந்தியாவின் முன்னணி திரைப்பட விழாவாக சென்னை சர்வதேச திரைப்பட விழா மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக அரசால் திரைப்படத்துறையினருக்கு ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திரைப்படத்துறையினரின் நலவாரியத்தில் 27 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இவ்வாரியம் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் வழங்க தேர்வுக்குழு அமைக்கப்பட்டு விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 500 கோடி மதிப்பீட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரி பணிகள் முடிவடையும். எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் 40 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள் தொடங்கவுள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.