எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் |
பிரதர் படத்தை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் சீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்த நிலையில் அடுத்தபடியாக கவுதம் மேனன் இயக்கும் ஒரு படத்தில் அவர் நடிக்கப் போகிறார். தற்போது மம்முட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் என்ற படத்தை இயக்கி வரும் கவுதம் மேனன், அந்த படத்தை அடுத்து வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.
இந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் கவுதம் மேனனும், ஜெயம் ரவியும் முதன் முறையாக இணையப் போகிறார்கள்.
ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில், சம்பள விவகாரத்தில் சிம்புவுக்கும் அந்த நிறுவனத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதன் காரணமாகவே மீண்டும் அதே நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க கவுதம் மேனன் அழைப்பு விடுத்தபோது அதை சிம்பு நிராகரித்து விட்டதாகவும், அதனால் ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.