‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பிரதர் படத்தை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் சீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்த நிலையில் அடுத்தபடியாக கவுதம் மேனன் இயக்கும் ஒரு படத்தில் அவர் நடிக்கப் போகிறார். தற்போது மம்முட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் என்ற படத்தை இயக்கி வரும் கவுதம் மேனன், அந்த படத்தை அடுத்து வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.
இந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் கவுதம் மேனனும், ஜெயம் ரவியும் முதன் முறையாக இணையப் போகிறார்கள்.
ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில், சம்பள விவகாரத்தில் சிம்புவுக்கும் அந்த நிறுவனத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதன் காரணமாகவே மீண்டும் அதே நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க கவுதம் மேனன் அழைப்பு விடுத்தபோது அதை சிம்பு நிராகரித்து விட்டதாகவும், அதனால் ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.