சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்துக்கு சிறப்பான பின்னணி இசையை கொடுத்து பாராட்டுக்களை பெற்றார் ஜி.வி.பிரகாஷ் குமார். இதன் காரணமாக அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்திற்கும் அவர் கமிட்டாகி இருக்கிறார். அதோடு சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 வது படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார்.
இப்படியான நிலையில் செல்வராகவன் இயக்கும் புதிய படத்திற்கும் தான் இசையமைக்கபோவதாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார் ஜி.வி .பிரகாஷ். அந்த பதிவில், செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களை தொடர்ந்து அவர் இயக்கும் புதிய படத்தின் மூலம் மூன்றாவது முறையாகவும் இணைய போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
செல்வராகவன் இயக்கும் இந்த புதிய படம் குறித்த அறிவிப்பு நாளை மாலை 6:30 மணிக்கு வெளியாக உள்ளது.