மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
மலையாள நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி மலையாள சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஜகமே தந்திரம், ஆக்ஷன், பொன்னியின் செல்வன் 1,2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது தமிழில் 'தக் லைப்' படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விலங்கு வெப் தொடர் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ள படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. கருடன் படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.