22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
மலையாள நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி மலையாள சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஜகமே தந்திரம், ஆக்ஷன், பொன்னியின் செல்வன் 1,2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது தமிழில் 'தக் லைப்' படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விலங்கு வெப் தொடர் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ள படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. கருடன் படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.