ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழகம், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முன்னணி நடிகர்களின் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது அவற்றிற்கான சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் கடந்த வருடம் அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சி நடைபெற்ற போது இளைஞர் ஒருவர் லாரி மீதிருந்து தவறி விழுந்து இறந்தார். அதன்பின் தமிழகத்தில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கப்படுவதில்லை. காலை 9 மணிக்கு மட்டுமே காட்சிகள் ஆரம்பமாகின்றன.
அல்லு அர்ஜுன் நடித்து நேற்று வெளியான 'புஷ்பா 2' படத்திற்கு ஒரு நாள் முன்னதாக பிரிமியர் காட்சிகளுக்கும், நேற்று அதிகாலை காட்சிகளுக்கும் தெலங்கானா அரசு அனுமதி வழங்கியது.. ஆனால், நேற்று முன்தினம் நடந்த பிரிமியர் காட்சிகளின் போது ஹைதராபாத்தில் தியேட்டர் ஒன்றில் கடும் நெரிசல் ஏற்பட்ட போது போலீசார் நடத்திய தடியடியால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 39 வயது பெண் ஒருவர் இறந்து போனார். அந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தெலங்கானா மாநில சினிமாட்டோகிராபி அமைச்சர் கொமட்டிரெட்டி வெங்கட ரெட்டி, தெலங்கானாவில் இனி வரும் காலத்தில் எந்தவிதமான சிறப்புக் காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அறிவித்துள்ளார். அவரது அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தைப் போலவே தற்போது தெலங்கானாவிலும் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது திரையுலகினருக்கும், சினிமா ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
ஐதராபாத் தியேட்டரில் நடந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு அல்லு அர்ஜுன் மீதும் தியேட்டர் நிர்வாகத்தின் மீதும் ஐதராபாத் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த தியேட்டருக்கு படத்தின் நாயகன் மற்றும் குழுவினர் வர உள்ளார்கள் என்பதை தியேட்டர் நிர்வாகம் தெரிவிக்கவில்லை என காவல் துறையினர் குற்றம் சாட்டியுள்ளார்கள்.