22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் 'புஷ்பா 2'. இப்படம் முன் பதிவிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. அதனால், முதல் நாள் வசூலாக மிகப்பெரும் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றபடியே அமைந்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய முதல் நாள் வசூல் மட்டும் உலக அளவில் சுமார் 200 கோடியைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். சில தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் இணையதளங்கள் 250 கோடியைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது என்றும் செய்தி வெளியிட்டுள்ளார்கள். இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் சொல்வதுதான் அதிகாரப்பூர்வமானது. எப்படியும் இன்னும் சில மணி நேரங்களில் தயாரிப்பு நிறுவனம் அதை அறிவித்துவிடும். அதுவரையிலும் அவரவர் விருப்பப்படி 200 கோடி, 250 கோடி என்று சொல்வார்கள்.
உலக அளவில் எவ்வளவு வசூலிக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், தெலுங்கைப் பொறுத்தவரையில் நிச்சயம் புதிய வசூல் சாதனை என்பது மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும் என தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.