ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் 'புஷ்பா 2'. இப்படம் முன் பதிவிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. அதனால், முதல் நாள் வசூலாக மிகப்பெரும் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றபடியே அமைந்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய முதல் நாள் வசூல் மட்டும் உலக அளவில் சுமார் 200 கோடியைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். சில தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் இணையதளங்கள் 250 கோடியைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது என்றும் செய்தி வெளியிட்டுள்ளார்கள். இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் சொல்வதுதான் அதிகாரப்பூர்வமானது. எப்படியும் இன்னும் சில மணி நேரங்களில் தயாரிப்பு நிறுவனம் அதை அறிவித்துவிடும். அதுவரையிலும் அவரவர் விருப்பப்படி 200 கோடி, 250 கோடி என்று சொல்வார்கள்.
உலக அளவில் எவ்வளவு வசூலிக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், தெலுங்கைப் பொறுத்தவரையில் நிச்சயம் புதிய வசூல் சாதனை என்பது மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும் என தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.