சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நாயகனாக அறிமுகமான 'மகாராஜ்' படம் கடந்த ஜனவரியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியானது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த 1862ம் ஆண்டு நடைபெற்ற மகாராஜ் வழக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படத்தில் கிஷோரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஷாலினி பாண்டே.
மகாராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜெய்தீப் அலாவத் இடம் பாத சேவைக்காக செல்லும் ஷாலினி பாண்டே மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சி படத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த சர்ச்சையான காட்சியில் நடித்தது பற்றி இதுவரை கருத்து தெரிவிக்காத ஷாலினி பாண்டே, முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அவர் கூறியதாவது: என் கதாபாத்திரத்திற்கு உண்மையாக இருக்க முயற்சித்தேன். அதனாலேயே அந்த காட்சிப்பற்றி அதிகம் யோசிக்கவில்லை. முடிந்தளவு வேகமாகவே அந்த காட்சி எடுக்கப்பட்டது. காட்சியில் நடித்தபிறகே நெருடலாக இருப்பதை உணர்ந்தேன். சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு வந்து பார்த்தபோது, 'இப்போ என்ன நடந்துச்சு' என எண்ணினேன்; அதுதான் யதார்த்தம். படம் வெளியான பிறகே ரொம்ப நெருடலாக உணர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.