ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ல் வெளிவந்த திரைப்படம் 'அமரன்'. கடந்த நான்கு வாரங்களுக்கும் மேலாக தியேட்டர்களில் இப்படம் பெரும் வரவேற்புடன் ஓடி வருகிறது. 320 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது.
இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஓடிடி வெளியீட்டை 8 வாரங்களுக்குப் பிறகே வெளியிட வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இரண்டு வாரங்களுக்கு முன்பே படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்தது.
ஆனால், 5 வார முடிவில் ஓடிடியில் இப்படத்தை வெளியிட உள்ளார்கள். பட வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி நிறுவனத்துடன் எந்தத் தேதியில் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதற்கான ஒப்பந்தம் போட்டிருப்பார்கள். அந்த ஒப்பந்தத்தை மீற வாய்ப்பில்லை என்பதால்தான் 5 வாரங்களில் வெளியிடுகிறார்கள், என்பது கோலிவுட் தகவல்.
மேலும், 'அமரன்' தற்போது அதிகத் தியேட்டர்களில் ஓடி வந்தாலும் குறைவான பார்வையாளர்களுடன்தான் ஓடி வருகிறது. டிசம்பர் 5ம் தேதி 'புஷ்பா 2' வருவதால் அதன்பின் தொடர வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள்.