மீண்டும் 'வித் லவ்' கூட்டணி : அபிஷன் ஜீவிந்த் தகவல் | 'ஜெய் ஹனுமான்' விரைவில் ஆரம்பம் | சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி |

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ல் வெளிவந்த திரைப்படம் 'அமரன்'. கடந்த நான்கு வாரங்களுக்கும் மேலாக தியேட்டர்களில் இப்படம் பெரும் வரவேற்புடன் ஓடி வருகிறது. 320 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது.
இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஓடிடி வெளியீட்டை 8 வாரங்களுக்குப் பிறகே வெளியிட வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இரண்டு வாரங்களுக்கு முன்பே படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்தது.
ஆனால், 5 வார முடிவில் ஓடிடியில் இப்படத்தை வெளியிட உள்ளார்கள். பட வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி நிறுவனத்துடன் எந்தத் தேதியில் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதற்கான ஒப்பந்தம் போட்டிருப்பார்கள். அந்த ஒப்பந்தத்தை மீற வாய்ப்பில்லை என்பதால்தான் 5 வாரங்களில் வெளியிடுகிறார்கள், என்பது கோலிவுட் தகவல்.
மேலும், 'அமரன்' தற்போது அதிகத் தியேட்டர்களில் ஓடி வந்தாலும் குறைவான பார்வையாளர்களுடன்தான் ஓடி வருகிறது. டிசம்பர் 5ம் தேதி 'புஷ்பா 2' வருவதால் அதன்பின் தொடர வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள்.