சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ல் வெளிவந்த திரைப்படம் 'அமரன்'. கடந்த நான்கு வாரங்களுக்கும் மேலாக தியேட்டர்களில் இப்படம் பெரும் வரவேற்புடன் ஓடி வருகிறது. 320 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது.
இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஓடிடி வெளியீட்டை 8 வாரங்களுக்குப் பிறகே வெளியிட வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இரண்டு வாரங்களுக்கு முன்பே படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்தது.
ஆனால், 5 வார முடிவில் ஓடிடியில் இப்படத்தை வெளியிட உள்ளார்கள். பட வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி நிறுவனத்துடன் எந்தத் தேதியில் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதற்கான ஒப்பந்தம் போட்டிருப்பார்கள். அந்த ஒப்பந்தத்தை மீற வாய்ப்பில்லை என்பதால்தான் 5 வாரங்களில் வெளியிடுகிறார்கள், என்பது கோலிவுட் தகவல்.
மேலும், 'அமரன்' தற்போது அதிகத் தியேட்டர்களில் ஓடி வந்தாலும் குறைவான பார்வையாளர்களுடன்தான் ஓடி வருகிறது. டிசம்பர் 5ம் தேதி 'புஷ்பா 2' வருவதால் அதன்பின் தொடர வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள்.