'குட் வொய்ப்' வெப் தொடரில் வலுவான நாயகி கதாபாத்திரம்: இயக்குனர் ரேவதி | பிளாஷ்பேக்: தமிழில் வந்த முதல் உளவியல் திரைப்படம் | சிவகார்த்திகேயன் 24வது படம் : இயக்குனர் யார்? | பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் | நடிகர் ஆர்யா உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை | சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ் | விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் கடந்த 31ம் தேதி திரைக்கு வந்த படம் அமரன். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருந்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று 300 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தை சேர்ந்த அதிகாரிகள், சிவகார்த்திகேயனை அழைத்து கவுரவித்துள்ளார்கள். அதோடு, மேஜர் முகுந்த் வரதராஜனாகவே அமரன் படத்தில் அவர் வாழ்ந்திருப்பதாக வாழ்த்தி பாராட்டி உள்ளார்கள். இந்த தகவலை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.