இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி | பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் | ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' |

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஜெயம் ரவி. தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகள் ஆர்த்தியைக் காதலித்து 2009ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிக்கை மூலம் தெரிவித்தார் ஜெயம் ரவி. தொடர்ந்து விவாகரத்து கோரி வழக்கும் தொடர்ந்தார். அதேசமயம் ஜெயம் ரவியின் இந்த முடிவு தன்னிச்சையானது என அறிக்கை வெளியிட்டார் ஆர்த்தி.
இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே இருவரையும் சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் இன்று(நவ., 27) நீதிமன்றத்தில் ஆஜராகினர். சமரச தீர்வு மையத்தில் சுமார் ஒருமணிநேரம் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் வழக்கை நீதிபதி டிச., 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.