'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் |

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஜெயம் ரவி. தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகள் ஆர்த்தியைக் காதலித்து 2009ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிக்கை மூலம் தெரிவித்தார் ஜெயம் ரவி. தொடர்ந்து விவாகரத்து கோரி வழக்கும் தொடர்ந்தார். அதேசமயம் ஜெயம் ரவியின் இந்த முடிவு தன்னிச்சையானது என அறிக்கை வெளியிட்டார் ஆர்த்தி.
இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே இருவரையும் சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் இன்று(நவ., 27) நீதிமன்றத்தில் ஆஜராகினர். சமரச தீர்வு மையத்தில் சுமார் ஒருமணிநேரம் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் வழக்கை நீதிபதி டிச., 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.