2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஜெயம் ரவி. தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகள் ஆர்த்தியைக் காதலித்து 2009ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிக்கை மூலம் தெரிவித்தார் ஜெயம் ரவி. தொடர்ந்து விவாகரத்து கோரி வழக்கும் தொடர்ந்தார். அதேசமயம் ஜெயம் ரவியின் இந்த முடிவு தன்னிச்சையானது என அறிக்கை வெளியிட்டார் ஆர்த்தி.
இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே இருவரையும் சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் இன்று(நவ., 27) நீதிமன்றத்தில் ஆஜராகினர். சமரச தீர்வு மையத்தில் சுமார் ஒருமணிநேரம் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் வழக்கை நீதிபதி டிச., 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.