‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் பிரபலமான நடிகை தமன்னா, சமீபகாலமாக பாலிவுட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடைசியாக தமிழில் அரண்மனை 4 படத்தில் நடித்தார். இந்தாண்டு தமிழில் வெற்றி வாகை சூடிய படங்களில் இதுவும் ஒன்று. அதன்பின் தமிழில் அவருக்கு வேறு படங்கள் இல்லை. ஹிந்தியில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக தென்னிந்திய படங்கள் இந்திய அளவில் வரவேற்பை பெறுகின்றன. இதுபற்றி நடிகை தமன்னா கூறுகையில், ‛‛தென்னிந்திய படங்கள் அவற்றின் புவியியல், நிலப்பரப்பு சார்ந்து அதிகம் பேசுகின்றன. குறிப்பாக மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து கதைகளை சொல்லுகின்றனர். அவர்கள் வெவ்வேறு வகையான மக்களுக்கு படத்தை தர எண்ணவில்லை. தங்களுக்கு தெரிந்ததை மட்டும் சொல்லுகிறார்கள். இதுதான் அவர்கள் கைகொடுக்கிறது'' என்றார்.