பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் பிரபலமான நடிகை தமன்னா, சமீபகாலமாக பாலிவுட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடைசியாக தமிழில் அரண்மனை 4 படத்தில் நடித்தார். இந்தாண்டு தமிழில் வெற்றி வாகை சூடிய படங்களில் இதுவும் ஒன்று. அதன்பின் தமிழில் அவருக்கு வேறு படங்கள் இல்லை. ஹிந்தியில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக தென்னிந்திய படங்கள் இந்திய அளவில் வரவேற்பை பெறுகின்றன. இதுபற்றி நடிகை தமன்னா கூறுகையில், ‛‛தென்னிந்திய படங்கள் அவற்றின் புவியியல், நிலப்பரப்பு சார்ந்து அதிகம் பேசுகின்றன. குறிப்பாக மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து கதைகளை சொல்லுகின்றனர். அவர்கள் வெவ்வேறு வகையான மக்களுக்கு படத்தை தர எண்ணவில்லை. தங்களுக்கு தெரிந்ததை மட்டும் சொல்லுகிறார்கள். இதுதான் அவர்கள் கைகொடுக்கிறது'' என்றார்.