100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! |

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் பிரபலமான நடிகை தமன்னா, சமீபகாலமாக பாலிவுட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடைசியாக தமிழில் அரண்மனை 4 படத்தில் நடித்தார். இந்தாண்டு தமிழில் வெற்றி வாகை சூடிய படங்களில் இதுவும் ஒன்று. அதன்பின் தமிழில் அவருக்கு வேறு படங்கள் இல்லை. ஹிந்தியில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக தென்னிந்திய படங்கள் இந்திய அளவில் வரவேற்பை பெறுகின்றன. இதுபற்றி நடிகை தமன்னா கூறுகையில், ‛‛தென்னிந்திய படங்கள் அவற்றின் புவியியல், நிலப்பரப்பு சார்ந்து அதிகம் பேசுகின்றன. குறிப்பாக மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து கதைகளை சொல்லுகின்றனர். அவர்கள் வெவ்வேறு வகையான மக்களுக்கு படத்தை தர எண்ணவில்லை. தங்களுக்கு தெரிந்ததை மட்டும் சொல்லுகிறார்கள். இதுதான் அவர்கள் கைகொடுக்கிறது'' என்றார்.