கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் |

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் பிரபலமான நடிகை தமன்னா, சமீபகாலமாக பாலிவுட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடைசியாக தமிழில் அரண்மனை 4 படத்தில் நடித்தார். இந்தாண்டு தமிழில் வெற்றி வாகை சூடிய படங்களில் இதுவும் ஒன்று. அதன்பின் தமிழில் அவருக்கு வேறு படங்கள் இல்லை. ஹிந்தியில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக தென்னிந்திய படங்கள் இந்திய அளவில் வரவேற்பை பெறுகின்றன. இதுபற்றி நடிகை தமன்னா கூறுகையில், ‛‛தென்னிந்திய படங்கள் அவற்றின் புவியியல், நிலப்பரப்பு சார்ந்து அதிகம் பேசுகின்றன. குறிப்பாக மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து கதைகளை சொல்லுகின்றனர். அவர்கள் வெவ்வேறு வகையான மக்களுக்கு படத்தை தர எண்ணவில்லை. தங்களுக்கு தெரிந்ததை மட்டும் சொல்லுகிறார்கள். இதுதான் அவர்கள் கைகொடுக்கிறது'' என்றார்.




