சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த 'புஷ்பா' படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகி அடுத்த மாதம் 5ம் தேதி வெளிவருகிறது. தெலுங்கில் தயாராகி இருந்தாலும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்திலும் பான் இந்தியா படமாக வெளிவருகிறது.
படத்தை தமிழில் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதன் தமிழ் பதிப்பு அறிமுக விழா, படத்தில் ஸ்ரீலீலா நடனம் இடம்பெறும் பாடல் வெளியீட்டு விழாவும் நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் அல்லு அர்ஜூன் பேசியதாவது:
இன்று என் வாழ்க்கையில் முக்கியமான நாள். எதற்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேனோ அது இன்று நடந்திருக்கிறது. இதற்கு முன்பு சென்னையில் பல விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு பெரிய அரங்கில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் முதல் 20 வருடம் எங்கு வாழ்கிறேனோ அந்த மண்ணுக்கே அந்த மனிதனின் சாதனைகள் சொந்தம் என்பார்கள். அந்த வகையில் இந்திய அளவில் உலக அளவில் நான் என்ன சாதித்தாலும் அது இந்த தமிழ் மண்ணுக்கு சொந்தம். நான் இன்னும் என்னை சாதாரண தி.நகர் பையனாகவே உணர்கிறேன். என்னுடைய ஆணி வேர் சென்னையில்தான் இருக்கிறது.
நான் எந்த நாட்டுக்கு போனாலும் அந்த நாட்டு மொழி தெரிந்திருந்தால் அந்த மொழியில்தான் பேசுவேன். தமிழ் எனக்கு நன்றாக தெரியும் அதனால் இங்கு வந்தால் தமிழில்தான் பேசுவேன். தமிழ் எனக்கு பிடித்த மொழி, என்னை வாழ வைத்த மொழி. 3 வருட கடின உழைப்பில் புஷ்பா 2 உருவாகி இருக்கிறது. இது தெலுங்கு படம் அல்ல. இந்திய படம். ஒரே நாடு, ஒரே சினிமா என்பதுதான் எனது பாலிசி.
இவ்வாறு அவர் கூறினார்.