26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த 'புஷ்பா' படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகி அடுத்த மாதம் 5ம் தேதி வெளிவருகிறது. தெலுங்கில் தயாராகி இருந்தாலும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்திலும் பான் இந்தியா படமாக வெளிவருகிறது.
படத்தை தமிழில் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதன் தமிழ் பதிப்பு அறிமுக விழா, படத்தில் ஸ்ரீலீலா நடனம் இடம்பெறும் பாடல் வெளியீட்டு விழாவும் நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் அல்லு அர்ஜூன் பேசியதாவது:
இன்று என் வாழ்க்கையில் முக்கியமான நாள். எதற்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேனோ அது இன்று நடந்திருக்கிறது. இதற்கு முன்பு சென்னையில் பல விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு பெரிய அரங்கில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் முதல் 20 வருடம் எங்கு வாழ்கிறேனோ அந்த மண்ணுக்கே அந்த மனிதனின் சாதனைகள் சொந்தம் என்பார்கள். அந்த வகையில் இந்திய அளவில் உலக அளவில் நான் என்ன சாதித்தாலும் அது இந்த தமிழ் மண்ணுக்கு சொந்தம். நான் இன்னும் என்னை சாதாரண தி.நகர் பையனாகவே உணர்கிறேன். என்னுடைய ஆணி வேர் சென்னையில்தான் இருக்கிறது.
நான் எந்த நாட்டுக்கு போனாலும் அந்த நாட்டு மொழி தெரிந்திருந்தால் அந்த மொழியில்தான் பேசுவேன். தமிழ் எனக்கு நன்றாக தெரியும் அதனால் இங்கு வந்தால் தமிழில்தான் பேசுவேன். தமிழ் எனக்கு பிடித்த மொழி, என்னை வாழ வைத்த மொழி. 3 வருட கடின உழைப்பில் புஷ்பா 2 உருவாகி இருக்கிறது. இது தெலுங்கு படம் அல்ல. இந்திய படம். ஒரே நாடு, ஒரே சினிமா என்பதுதான் எனது பாலிசி.
இவ்வாறு அவர் கூறினார்.




