'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

பொதுவாக கே.பாலச்சந்தர் நகர்புறத்து நடுத்தர மக்களையே கதை மாந்தர்களாக கொண்டு படம் எடுப்பார் என்ற பொதுவான கருத்து இருந்த காலத்தில் அவர் இயக்கிய கிராமத்து படம்தான் 'எங்க ஊரு கண்ணகி'. இதே படம் தெலுங்கில் 'தோலி கோடி கோசிந்தி' என்ற பெயரிலும் தயாரானது. பார்வை குறைபாடுள்ள ஒரு கிராமத்து பெண். அங்குள்ள வில்லன்களை எதிர்த்து போராடும் கதை.
பார்வையற்ற பெண்ணாக சரிதா நடித்தார், போலீஸ் கான்ஸ்டபிளாக சரத்பாபு நடித்தார். இவர்கள் தவிர சீமா, மாதவி, ஜீவா உள்பட பலர் நடித்திருந்தார்கள். முக்கிய நடிகர்கள் தவிர தமிழ், தெலுங்கிற்கு தனித்தனி நடிகர்கள் நடித்திருந்தார்கள். முழு படமும் ஆந்திராவில் உள்ள பட்டிசீமா வீரபத்தா கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் படமானது. இதனால் தமிழ் பதிப்பிலும் தெலுங்கு வாசனை வீசியது. வில்லன் மீது நாயை ஏவி விடுவது, சரிதா, சீமா, மாதவி ஆகியோரின் குளியல் காட்சிகள் போன்றவை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
தமிழில் இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் தெலுங்கில் வெற்றி பெற்றதோடு சிறந்த படம், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த பாடலாசிரியர் என 1981ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றது.




