'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

பொதுவாக கே.பாலச்சந்தர் நகர்புறத்து நடுத்தர மக்களையே கதை மாந்தர்களாக கொண்டு படம் எடுப்பார் என்ற பொதுவான கருத்து இருந்த காலத்தில் அவர் இயக்கிய கிராமத்து படம்தான் 'எங்க ஊரு கண்ணகி'. இதே படம் தெலுங்கில் 'தோலி கோடி கோசிந்தி' என்ற பெயரிலும் தயாரானது. பார்வை குறைபாடுள்ள ஒரு கிராமத்து பெண். அங்குள்ள வில்லன்களை எதிர்த்து போராடும் கதை.
பார்வையற்ற பெண்ணாக சரிதா நடித்தார், போலீஸ் கான்ஸ்டபிளாக சரத்பாபு நடித்தார். இவர்கள் தவிர சீமா, மாதவி, ஜீவா உள்பட பலர் நடித்திருந்தார்கள். முக்கிய நடிகர்கள் தவிர தமிழ், தெலுங்கிற்கு தனித்தனி நடிகர்கள் நடித்திருந்தார்கள். முழு படமும் ஆந்திராவில் உள்ள பட்டிசீமா வீரபத்தா கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் படமானது. இதனால் தமிழ் பதிப்பிலும் தெலுங்கு வாசனை வீசியது. வில்லன் மீது நாயை ஏவி விடுவது, சரிதா, சீமா, மாதவி ஆகியோரின் குளியல் காட்சிகள் போன்றவை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
தமிழில் இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் தெலுங்கில் வெற்றி பெற்றதோடு சிறந்த படம், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த பாடலாசிரியர் என 1981ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றது.