எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்ட நடிகர் விஜய் தேவரகொண்டா, தொடர்ந்து வருடத்திற்கு இரண்டு படங்களிலாவது நடிப்பதில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் தனது 12வது படத்தில் இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஆச்சரியமாக சாஹிபா என்கிற வீடியோ ஆல்பம் ஒன்றிலும் அவர் நடித்துள்ளார். விரைவில் இந்த ஆல்பம் வெளியாக இருக்கிறது. சுதர்சன் சந்து என்பவர் இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளார். இதில் பாடகியும் ஆல்பம் நடிகையுமான ஜஸ்லீன் ராயல், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆல்பத்தில் நடிக்க விருப்பம் இல்லாமல் இருந்த தன்னை வேறு வழியின்றி இதில் இழுத்து வந்ததில் ஜஸ்லீன் ராயலுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்று கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.
இதுபற்றி அவர் கூறும்போது, “இதற்கு முன் துல்கர்சல்மானுடன் ஜஸ்லீன் ராயல் இணைந்து செய்த ஹீரியே என்கிற மியூசிக் ஆல்பம் எங்கள் வீட்டில் தினசரி ஒலிக்கும் ஒன்று. அதேபோல இந்த ஷாஹிபா பாடலுடன் ஜஸ்லீன் என்னிடம் வந்த போது இந்த பாடலை கேட்டதும் இது அடிக்கடி ரிப்பீட்டாக கேட்கும் ஒரு பாடலாக மாறப்போகிறது என்று தோன்றியது. உடனே மனம் விட்டும் பாராட்டினேன். ஆனால் என்னை நடிக்க கேட்டபோது தயங்கினேன். பல காரணங்களை சொல்லி நடிப்பதை தவிர்க்கப் பார்த்தேன். நீளமான தலைமுடி கொண்ட தோற்றத்துடன் ஒரு காட்சியில் என்னை யோசித்து வைத்திருந்தார் ஜஸ்லீன். ஆனால் நான் வேண்டுமென்றே ஹேர் கட் செய்து விட்டேன். ஆனாலும் பொறுமையாக காத்திருந்து என்னை நடிக்க சம்மதிக்க வைத்து விட்டார்” என்று கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.