பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை |

மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக பிஸியாக இருவரும் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2008ல் வெளியான 'Twenty:20' மலையாள படத்தில் மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்தனர். அதன் பின்னர் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப் பிறகு தற்போது மம்முட்டி,மோகன்லால் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மம்முட்டி, மோகன்லால் என இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இதில் மற்றொரு மலையாள நடிகரான குஞ்சாக்கோ போபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் தொடங்கும் என்கிறார்கள்.