விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள அவரது 69வது படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. தீவிர அரசியலுக்கு இறங்குவதற்கு முன்பாக விஜய்யின் கடைசி படமாக இப்படம் அமைய உள்ளது. அதனால், படத்தின் மீது நிறையவே எதிர்பார்ப்பு உள்ளது.
அரசியல் கதையாக, அரசியல் பன்ச் வசனங்கள் உள்ள படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, படத்திற்கான வியாபாரமும் இப்போதே மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை 'பார்ஸ் பிலிம்ஸ்' என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 75 கோடி கொடுத்து அந்த உரிமையைப் பெற்றுள்ளார்களாம்.
இதற்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படத்தின் வெளிநாட்டு உரிமையையும் அந்த நிறுவனம்தான் வாங்கியிருந்தது. அதன் விலை சுமார் 70 கோடி வரை இருந்ததாம். தற்போது கூடுதல் தொகையுடன்தான் 'விஜய் 69' உரிமையை வாங்கியுள்ளார்கள். விஜய்யின் கடைசி படம் என்பதால் அத்தொகையை எளிதில் வசூலித்து விடலாம் என்ற நம்பிக்கைதான் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
'விஜய் 69' படத்தின் இதர வெளியீட்டு உரிமைகள் அனைத்துமே அவரது முந்தைய படங்களை விடவும் அதிகமாகவே நடக்கும் என வியாபார வட்டாரங்களில் சொல்கிறார்கள். அதே சமயம், படத்தின் பட்ஜெட்டை அதிகப்படுத்தி விடக் கூடாது என்பதில் தயாரிப்பு நிறுவனமும் மிகவும் உறுதியாக இருககிறது என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது.