ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள அவரது 69வது படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. தீவிர அரசியலுக்கு இறங்குவதற்கு முன்பாக விஜய்யின் கடைசி படமாக இப்படம் அமைய உள்ளது. அதனால், படத்தின் மீது நிறையவே எதிர்பார்ப்பு உள்ளது.
அரசியல் கதையாக, அரசியல் பன்ச் வசனங்கள் உள்ள படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, படத்திற்கான வியாபாரமும் இப்போதே மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை 'பார்ஸ் பிலிம்ஸ்' என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 75 கோடி கொடுத்து அந்த உரிமையைப் பெற்றுள்ளார்களாம்.
இதற்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படத்தின் வெளிநாட்டு உரிமையையும் அந்த நிறுவனம்தான் வாங்கியிருந்தது. அதன் விலை சுமார் 70 கோடி வரை இருந்ததாம். தற்போது கூடுதல் தொகையுடன்தான் 'விஜய் 69' உரிமையை வாங்கியுள்ளார்கள். விஜய்யின் கடைசி படம் என்பதால் அத்தொகையை எளிதில் வசூலித்து விடலாம் என்ற நம்பிக்கைதான் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
'விஜய் 69' படத்தின் இதர வெளியீட்டு உரிமைகள் அனைத்துமே அவரது முந்தைய படங்களை விடவும் அதிகமாகவே நடக்கும் என வியாபார வட்டாரங்களில் சொல்கிறார்கள். அதே சமயம், படத்தின் பட்ஜெட்டை அதிகப்படுத்தி விடக் கூடாது என்பதில் தயாரிப்பு நிறுவனமும் மிகவும் உறுதியாக இருககிறது என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது.