சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகை தாண்டி தமிழில் அறிமுகமாகி பின்னர் அப்படியே படிப்படியாக தெலுங்கு, ஹிந்தி திரையுலகம் வரை சென்று விட்டார். குறிப்பாக தமிழை விட தெலுங்கு திரையுலக படைப்பாளிகளும் ரசிகர்களும் துல்கர் சல்மானுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து அவரை ஆராதித்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அவர் நடித்த 'சீதாராமம்' படம் அவரை தெலுங்கு ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமாக்கியது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்ஷனில் துல்கர் சல்மான் நடித்த 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. நான்கே நாட்களில் 55 கோடி வசூலித்து தற்போது அடுத்த இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. துல்கர் சல்மானை தெலுங்கில் முதன் முதலாக 'மகாநடி' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவரும் சமீபத்தில் வெளியான 'கல்கி' படத்தின் இயக்குனருமான நாக் அஸ்வினும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “நான் சென்னையில் இருந்த துல்கர் சல்மானிடம் 'மகாநடி' படத்தின் கதையை சொல்வதற்காக சென்றேன். ஆனால் அவர் கதையை கேட்கும் முன்பாகவே இந்த படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டார். காரணம் எனக்கு தெலுங்கு பேச வராது.. அதனால் தெலுங்கு படங்களில் நடிக்க முடியாது.. படம் பார்க்கும் ரசிகர்கள் என்னை கூர்மையாக கவனிப்பார்கள். இவனுக்கு தெலுங்கு பேசவே தெரியவில்லையே என்று சொல்லி விட மாட்டார்களா, என்று கூறினார்.
ஆனால் அவரை கன்வின்ஸ் செய்து அந்த படத்தில் நடிக்க வைத்தேன். இன்று ஆறு வருடங்களுக்குப் பிறகு, மூன்று பிளாக் பஸ்டர்கள் சேர்ந்த ஒரு ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு இதோ தெலுங்கு ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக ஒரு தெலுங்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு அவர் உயர்ந்துள்ளார். இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு நன்றி” என்று துல்கர் சல்மானை மேடையில் வைத்துக் கொண்டே இந்த புதிய தகவலை வெளியிட்டார் இயக்குனர் நாக் அஸ்வின்.