நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

கன்னட சினிமாவில் இயக்குரும், நடிகருமாக இருந்தவர் குரு பிரசாத். 2006ம் ஆண்டு 'மாதா' என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் எட்டேலு மஞ்சுநாதா, டைரக்டர்ஸ் ஸ்பெஷல், எரடனே சாலா, ரங்கநாயகா உள்பட பல படங்களை இயக்கினார். சில படங்களில் நடித்துள்ளார்.
பெங்களூரு மதநாயக்கனஹள்ளி அப்பார்ட்மென்ட்டில் வசித்துவந்த நிலையில், மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 52 வயதான குரு பிரசாத் சமீபத்தில்தான் 2வது திருமணம் செய்தார். குருபிரசாத் கடும் நிதி நெருக்கடியில் இருந்தது அவரது பல படங்கள் முடிக்கப்படாமல் பாதியில் நிற்பது குருபிரசாத்தின் இயக்கத்தில் வெளியான கடைசி படமான 'ரங்கநாயகா' படம் தோல்வியைச் சந்தித்தது ஆகியவைதான் தற்கொலைக்கு காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரிவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரது இரண்டாவது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.