இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' |

டிக் டாக் செயலியில் ஆபாசமான, கவர்ச்சியான வீடியோக்களை பதிவேற்றி பிரபலமானவர் இலக்கியா. நீ சுடத் தான் வந்தியா என்ற படத்திலும் இவர் நடித்தார். இந்த படம் வந்ததா என்று கூட தெரியவில்லை. ‛டிக் டாக்' தடை செய்யப்பட்ட பின்னர் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு வந்தார். பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை இலக்கியா எடுத்துள்ளார். இதனால் மயங்கிய அவர் முதலில் பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் "என்னோட சாவுக்கு ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் காரணம். என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான். 6 வருஷமா அவன்கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணு கூட பழக்கம், அதைக்கேட்டா என்னை போட்டு அடிக்குறான். நானும் பொறுத்து பொறுத்து... என்னால முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான்'' என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த பதிவை அவர் நீக்கிவிட்டதாக தெரிகிறது. மேலும் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக செய்தி பரவிய நிலையில் ‛எல்லாமே பொய்யான செய்தி' என இன்ஸ்டா ஸ்டோரியில் இலக்கியா குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் அவர் தற்கொலைக்கு தான் முயற்சித்தாரா... இல்லை அளவுக்கு அதிகமான ஊட்டசத்து மாத்திரை எடுத்ததால் மயங்கினாரா.... ஸ்டன்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் மீது கூறிய குற்றச்சாட்டு என்ன என்பதை அவரே விளக்கினால் தான் உண்மை தெரிய வரும்.




