‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
கன்னடத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தர்ஷன். அவருடைய பெண் தோழியான நடிகை பவித்ரா கவுடாவை சமூக வலைத்தளத்தில் ரேணுகாசுவாமி என்பவர் தொல்லை தந்ததாக கொலை செய்தார். இதையடுத்து தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையிலும் அவருக்கு சில வசதிகள் செய்து தரப்பட்டதாகவும் சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் அவருக்கு ஆறு வார கால ஜாமின் வழங்கியுள்ளது.
முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அவர் மனு செய்ததை அடுத்து இந்த ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் அளித்த சான்றுகளின் அடிப்படையில் மாநில அரசும் அதற்கு பதிலளித்துள்ளதாகத் தெரிகிறது.
மருத்துவ சிகிச்சை முடிந்த பின் அவர் உடனே சிறைக்குத் திரும்புவாரா அல்லது மேலும் சில வாரங்கள் நீட்டிப்பு கேட்பாரா என்பது அறுவை சிகிச்சை முடிந்த பிறகுதான் தெரியும்.