டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கன்னடத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தர்ஷன். அவருடைய பெண் தோழியான நடிகை பவித்ரா கவுடாவை சமூக வலைத்தளத்தில் ரேணுகாசுவாமி என்பவர் தொல்லை தந்ததாக கொலை செய்தார். இதையடுத்து தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையிலும் அவருக்கு சில வசதிகள் செய்து தரப்பட்டதாகவும் சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் அவருக்கு ஆறு வார கால ஜாமின் வழங்கியுள்ளது.
முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அவர் மனு செய்ததை அடுத்து இந்த ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் அளித்த சான்றுகளின் அடிப்படையில் மாநில அரசும் அதற்கு பதிலளித்துள்ளதாகத் தெரிகிறது.
மருத்துவ சிகிச்சை முடிந்த பின் அவர் உடனே சிறைக்குத் திரும்புவாரா அல்லது மேலும் சில வாரங்கள் நீட்டிப்பு கேட்பாரா என்பது அறுவை சிகிச்சை முடிந்த பிறகுதான் தெரியும்.




