கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொள்கிறார். அதற்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இந்த நேரத்தில் அஜித்துக்கு, துணை முதல்வரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், 'உலக அளவில் சிறப்புக்குரிய துபாய் கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை அஜித்குமார் ரேசிங் யூனிட்டின் கார் ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். இதன் மூலம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி ஊக்குவித்துள்ள அஜித்துக்கு தமிழக விளையாட்டு துறை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதோடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பார்முலா 4 சென்னை ரேசிங் ஸ்டீரிட் ஆகியவற்றை வாழ்த்திய அஜித்துக்கு எங்களது அன்பு நன்றியும். விளையாட்டுத்துறையில் தமிழகத்தை உலக அரங்கில் ஒன்றிணைந்து செயல்படுவோம். போட்டியில் வென்று தமிழகத்திற்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துக்கள்,' என அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார் உதயநிதி.
அவரது இந்த பதிவு சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் அவரை எதிர்ப்பதற்காக அஜித்தை தனக்கு ஆதரவாக அழைக்கிறார் உதயநிதி. கார் பந்தயத்தில் கலந்து கொள்பவருக்கு நன்றி தெரிவிப்பவர் எதற்காக திராவிட மாடலை எல்லாம் கொண்டு வர வேண்டும். அஜித் ரசிகர்களின் ஆதரவு தேவை என்றால் அவரிடத்தில் நேரடியாக கேட்க வேண்டியதுதானே என்று பலரும் பலதரப்பட்ட கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.