இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் | வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் |
சென்னை : விஜய் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தியிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என நடிகர் ரஜினி தெரிவித்தார்.
ஒவ்வொரு தீபாவளிப் பண்டிகைக்கும் சென்னையில் இருந்தால் தனது போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் முன் ரசிகர்களை சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் ரஜினி. இந்த தீபாவளிக்கும் தனது இல்லத்தின் முன்பு கூடிய ரசிகர்களை சந்தித்த ரஜினி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி : அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துகள். மக்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகள். விஜய் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள் என்றார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டில் விஜய் பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ரொம்ப நன்றி, ரொம்ப நன்றி என பதில் அளித்துவிட்டு நழுவி சென்றார் ரஜினி.