தங்கலான் படத்திற்காக அதிகம் மெனக்கெட்டேன்: மனம் திறந்த மாளவிகா மோகனன் | திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வதுதான் முழுமையான வாழ்க்கையா : சமந்தா கேள்வி | ஸ்வீட் ஹார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிரத்னத்துடன் எடுத்த போட்டோ : ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி | வெளியானது 'விடாமுயற்சி' படம்: ரசிகர்களுடன் படம் பார்த்த திரை பிரபலங்கள் | பிளாஷ்பேக் : படப்பிடிப்பிற்கே வந்து நடிகையை கடத்த முயன்றவர்களை அடித்து துரத்திய கொச்சின் ஹனீபா | தான் நடத்திய வழக்கை படமாக இயக்கும் வழக்கறிஞர் | கேரளாவில் இருந்து நடந்தே வந்து விஜய்யை சந்தித்த ரசிகர் | ராஷ்மிகாவுக்கு உதவி செய்யாத விஜய் தேவரகொண்டா ; நெட்டிசன்கள் கண்டனம் | திலீப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
விஜய் நடித்து வெளிவந்த படத்தின் கிளைமாக்சில் தன்னிடமிருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் விஜய் கொடுக்கும்படியான காட்சி ஒன்று இருந்தது. சினிமாவை விட்டு விலகி விஜய் அரசியலில் பயணிக்கப் போவதை அடுத்து அவருடைய இடத்திற்குப் பிறகு அந்த இடத்திற்கு சிவகார்த்திகேயனுக்குத்தான் இந்த இடம் என 'குறீயீடாக' அந்தக் காட்சி அமைந்ததா என பலரும் விமர்சித்தார்கள்.
'அமரன்' படத்தின் புரமோஷனுக்காக நேற்று கோவை சென்ற சிவகார்த்திகேயனிடம் அது குறித்து பத்திரிகை நிருபர்கள் கேட்டனர். அதற்கு சிவகார்த்திகேயன், “நான் அந்தக் காட்சிக்குள்ள எதுவுமே பார்க்கலை. சினிமாவுல நடந்த அழகான ஒரு நிகழ்வா பார்க்கிறேன். ஒரு சீனியர் ஆக்டர், அடுத்த அவங்க செட் ஆக்டரோட ஒரு ஸ்கிரீன் ஷேர் பண்ணாங்க. அது அழகா இருந்துச்சு, அதை மட்டும்தான் நான் பார்த்தேன். நான் சினிமாவுல சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு,” எனப் பேசி சமாளித்தார்.
விஜய் கடைசியாக அவரது 69வது படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவருக்குப் பின் அந்த இடத்திற்கு யார் வரப் போகிறது என்ற போட்டி இப்போதே ஆரம்பமாகிவிட்டது.