ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

விஜய் நடித்து வெளிவந்த படத்தின் கிளைமாக்சில் தன்னிடமிருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் விஜய் கொடுக்கும்படியான காட்சி ஒன்று இருந்தது. சினிமாவை விட்டு விலகி விஜய் அரசியலில் பயணிக்கப் போவதை அடுத்து அவருடைய இடத்திற்குப் பிறகு அந்த இடத்திற்கு சிவகார்த்திகேயனுக்குத்தான் இந்த இடம் என 'குறீயீடாக' அந்தக் காட்சி அமைந்ததா என பலரும் விமர்சித்தார்கள்.
'அமரன்' படத்தின் புரமோஷனுக்காக நேற்று கோவை சென்ற சிவகார்த்திகேயனிடம் அது குறித்து பத்திரிகை நிருபர்கள் கேட்டனர். அதற்கு சிவகார்த்திகேயன், “நான் அந்தக் காட்சிக்குள்ள எதுவுமே பார்க்கலை. சினிமாவுல நடந்த அழகான ஒரு நிகழ்வா பார்க்கிறேன். ஒரு சீனியர் ஆக்டர், அடுத்த அவங்க செட் ஆக்டரோட ஒரு ஸ்கிரீன் ஷேர் பண்ணாங்க. அது அழகா இருந்துச்சு, அதை மட்டும்தான் நான் பார்த்தேன். நான் சினிமாவுல சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு,” எனப் பேசி சமாளித்தார்.
விஜய் கடைசியாக அவரது 69வது படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவருக்குப் பின் அந்த இடத்திற்கு யார் வரப் போகிறது என்ற போட்டி இப்போதே ஆரம்பமாகிவிட்டது.




