பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் சாமிநாதன் சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து 'மகாராஜா' படத்தை இயக்கிருந்தார். இது விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது நிதிலன் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது, "மகாராஜா படத்தை தொடர்ந்து மீண்டும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்குகிறேன். இது குறித்து அறிவிப்புகள் மற்றும் மற்ற விவரங்களை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும்" என தெரிவித்தார்.