சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்கி உள்ளார்.
இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பை அந்தமான், கேரளா, மூணார்,சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தி வந்தனர். சமீபத்தில் இதன் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது.
கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டி ஒன்றில், " சூர்யா 44வது படமாக கேங்க்ஸ்டர் படம் என கூறப்படுகிறது. ஆனால், சூர்யா 44 படம் ஒரு அழகான காதல் கதை. அதில் ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. சூர்யா, பூஜா ஹெக்டே சம்மந்தப்பட்ட காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக உருவாக்கியுள்ளது. இப்படம் 2025ம் ஆண்டு கோடையில் திரைக்கு வருவதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.




