'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் |
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்கி உள்ளார்.
இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பை அந்தமான், கேரளா, மூணார்,சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தி வந்தனர். சமீபத்தில் இதன் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது.
கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டி ஒன்றில், " சூர்யா 44வது படமாக கேங்க்ஸ்டர் படம் என கூறப்படுகிறது. ஆனால், சூர்யா 44 படம் ஒரு அழகான காதல் கதை. அதில் ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. சூர்யா, பூஜா ஹெக்டே சம்மந்தப்பட்ட காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக உருவாக்கியுள்ளது. இப்படம் 2025ம் ஆண்டு கோடையில் திரைக்கு வருவதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.