மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
ரஜினியும், ஏவிஎம் நிறுவனமும் இணைந்து பணியாற்றிய முதல் படம் 'முரட்டுக்காளை'. ரஜினியின் டாப் டென் படங்களில் இதுவும் ஒன்று. வழக்கமான ஹேர் ஸ்டைலை மாற்றி ரஜினி நடித்த படம். இந்த படத்தில் பவுர்புல்லான வில்லன் கேரக்டரில் ஒரு பெரிய நடிகரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. அப்போது கதாசிரியர் பஞ்சு அருணாசனத்தின் நினைவுக்கு வந்தவர் ஜெய்சங்கர்.
100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்த ஜெய்சங்கர் படங்கள் எதுவும் இன்றி வீட்டில் இருந்தார். என்றாலும் ஹீரோவாக நடித்தவர் வில்லனாக நடிக்க ஒப்புக் கொள்வரா என்ற தயக்கம் இருந்தது. என்றாலும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனே ஜெய்சங்கரை அழைத்திருக்கிறார். தன்னை வில்லனாக நடிக்கக் கேட்கிறார்களே...' என்கிற தயக்கம் முதலில் ஜெய்சங்கருக்கு இருந்தாலும், பஞ்சு அருணாச்சலம், ஏவிஎம் சரவணன், எஸ்.பி.முத்துராமன் ஆகியவர்கள் தனது நலம் விரும்பிகள் என்கிற ஒரே காரணத்திற்காக உடனே ஒப்புக் கொண்டார் ஜெய்சங்கர்.
ஹீரோ ரஜினிக்கே இது ஆச்சரியமான செய்திதான். ஜெய்சங்கர் நான் ரசித்து பார்த்த ஹீரோ. அவர் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம். ஆனாலும் அவருக்குரிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும் என்ற ரஜினி மூன்று நிபந்தனைகளை விதித்தார்.
படத்தின் விளம்பரங்களில் எனக்கு இணையான முக்கியத்தும் ஜெய்சங்கருக்கும் தரப்பட வேண்டும். கதைப்படி வரும் கற்பழிப்பு காட்சியை கற்பழிக்க முயற்சிப்பது போன்று மாற்றம் செய்ய வேண்டும். கிளைமாக்சில் போலீசார் வில்லனை அடித்து இழுத்து செல்வது போன்ற காட்சியை மாற்ற வேண்டும் என்றார். அப்படியே செய்யப்பட்டது.