மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? |

மலையாள நடிகை மஞ்சு வாரியர் சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் மூலம் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை வசீகரித்துள்ளார். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மலையாள சினிமாவில் தொடர்ந்து முன்னணி நட்சத்திரமாக நடித்து வரும் அவர் தமிழில் அசுரன், துணிவு படங்களின் மூலமும் ரசிகர்களை கவர்ந்து தற்போது ரஜினிக்கு ஜோடியாக வேட்டையன் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். ஒரு பக்கம் முன்னாள் கணவர் நடிகர் திலீப்புடனான விவாகரத்து, அதன் பிறகு தனது மகள் மீனாட்சியின் பாராமுகம் என பெர்சனலாக பல பாதிப்புகள் அவரை சூழ்ந்து இருந்தாலும் எப்போதும் தாமரை போல் மலர்ந்த முகத்துடன் எதில் இருப்பவர்களையும் உற்சாகப்படுத்தும் பெண்ணாகவே வலம் வருகிறார் மஞ்சு வாரியர்.
இப்படி மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு வெளியில் இருந்து எந்த உதவியையும் தேட வேண்டாம் நமக்குள்ளேயே அது இருக்கிறது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மஞ்சு வாரியர். இதுபற்றி அவர் கூறும்போது, “சந்தோஷத்தை எதிலும் தேட வேண்டாம். ஏதோ சில விஷயங்களை கேட்கும்போதும் பார்க்கும்போதும் மட்டுமே சந்தோஷமாக இருக்க முடிகிறது என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். நீங்களாகவே உங்களுக்குள் சந்தோஷத்தை கொண்டு வர முடியும். சந்தோஷத்தை உணர்வதற்காக வெளியில் இருந்து எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டாம். அது தேவையானதும் அல்ல. நான் தனியாக இருந்தாலும் ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் கூட நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். அது சரியா தவறா என்பது எனக்கு தெரியாது. நான் விரும்பும் வரை எந்த வேலையும் செய்யாமல் என்னால் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க முடியும்” என்று கூறியுள்ளார்.