மகிழ்ச்சியை உணர வெளியில் இருந்து உதவியை எதிர்பார்க்காதீர்கள் : மஞ்சு வாரியர் | ரசிகர் கொலை வழக்கு : நடிகர் தர்ஷினின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு | பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கிச்சா சுதீப் | அஜித்திற்கு போட்டியாக களம் இறங்கிய கீர்த்தி சுரேஷ் | வேட்டையன் படத்தில் நானி நடிக்க மறுத்தாரா? | இயக்குனராக அறிமுகமாகும் வேட்டையன் வில்லன் நடிகர் ; கதாநாயகியாக பிசாசு நடிகை | விக்ரம் பட நடிகைக்கு போதை கும்பல் மிரட்டல் | மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மலையாள நடிகர் கைது | நிவின்பாலியின் 'டியர் ஸ்டூடன்ட்ஸ்' படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | பிளாஷ்பேக் : தயாரிப்பு நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட சிவாஜி : அவரையே தனது தயாரிப்பாளராகவும் மாற்றிய தருணம் |
மலையாள நடிகை மஞ்சு வாரியர் சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் மூலம் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை வசீகரித்துள்ளார். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மலையாள சினிமாவில் தொடர்ந்து முன்னணி நட்சத்திரமாக நடித்து வரும் அவர் தமிழில் அசுரன், துணிவு படங்களின் மூலமும் ரசிகர்களை கவர்ந்து தற்போது ரஜினிக்கு ஜோடியாக வேட்டையன் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். ஒரு பக்கம் முன்னாள் கணவர் நடிகர் திலீப்புடனான விவாகரத்து, அதன் பிறகு தனது மகள் மீனாட்சியின் பாராமுகம் என பெர்சனலாக பல பாதிப்புகள் அவரை சூழ்ந்து இருந்தாலும் எப்போதும் தாமரை போல் மலர்ந்த முகத்துடன் எதில் இருப்பவர்களையும் உற்சாகப்படுத்தும் பெண்ணாகவே வலம் வருகிறார் மஞ்சு வாரியர்.
இப்படி மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு வெளியில் இருந்து எந்த உதவியையும் தேட வேண்டாம் நமக்குள்ளேயே அது இருக்கிறது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மஞ்சு வாரியர். இதுபற்றி அவர் கூறும்போது, “சந்தோஷத்தை எதிலும் தேட வேண்டாம். ஏதோ சில விஷயங்களை கேட்கும்போதும் பார்க்கும்போதும் மட்டுமே சந்தோஷமாக இருக்க முடிகிறது என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். நீங்களாகவே உங்களுக்குள் சந்தோஷத்தை கொண்டு வர முடியும். சந்தோஷத்தை உணர்வதற்காக வெளியில் இருந்து எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டாம். அது தேவையானதும் அல்ல. நான் தனியாக இருந்தாலும் ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் கூட நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். அது சரியா தவறா என்பது எனக்கு தெரியாது. நான் விரும்பும் வரை எந்த வேலையும் செய்யாமல் என்னால் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க முடியும்” என்று கூறியுள்ளார்.